வேலைக்கார தேனீக்கள் (பாகம் III)

பூக்களில் மகரந்தசேர்க்கைக்கு பெரிதும் உதவி செய்பவை வேலைக்கார தேனீக்கள் ஆகும்.இராணியைக் கவனிப்பது,முட்டையிலிருந்து வெளியேறும் குடம்பிகளை பாதுகாப்பது,அவற்றிற்கு உணவு கொடுப்பது,சுத்தப்படுத்துவது மற்றும் உணவு தேடுதல் என அனைத்து செயற்பாடுகளும் இந்த வேலைக்கார தேனீக்களால் மேற் கொள்ளப்படுகின்றன.
வேலைக்கார தேனீக்களின் கடமைகளில் ஒன்றான உணவுத் தேடலுக்கு தூர இடங்கள் செல்ல வேண்டி உள்ளது.தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது.இவற்றால் மணிக்கு 15 மைல் என்னும் வேகத்தில் பறக்க முடியும்.தேனீக்கள் ஒரு பவுண்டு தேன் சேகரித்துக் கொண்டுவர ஒரு தேனீ சுமார் 45 000 மைல் தூரம் அலைந்து உழைக்க வேண்டும்.ஒரு கிலோ தேனைச் சேகரிக்க 40 இலட்சம் பூக்களிலிருந்து அமுதம்(Nector) என்னும் பதார்த்தம் உறிஞ்சி எடுக்கின்றன(!).இவ்வாறு ஒரு தேனீ தேன் இருக்குமிடத்தை கண்டு பிடித்துவிட்டால் மற்ற தேனீகளுக்கு உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றது.இந்த அசைவுகளே தேனீக்களின் நடனம் என்றழைக்கப்படுகிறது.

தேனீக்களை பற்றி பல ஆண்டுகள் ஆய்வு நடத்திய பிரெஞ்சு விஞ்ஞானி வான் பிரிச்(von frisch) தேனீக்களின் நடனம் பற்றி இவ்வாறு கூறுகிறார்.தேனீக்கள் உடல் அசைவுகளின் மூலம் தகவல் பரிமற்றம் செய்கின்றன.வேவு பார்க்கும் தேனீக்கள் பூந்தோட்டத்திற்குச் சென்று தேனை பருகியபின் தன் கூட்டருகே சென்று மற்ற தேனீக்களுக்கு நடனத்தின் மூலம் தகவலை தெரியப்படுத்தும்.இந்த நடனம் மூலம் உணவு இருக்குமிடம்,திசை,தூரம் என்பவற்றை தெரிவிக்கின்றன.தேனீக்கள் இரண்டு விதமாக நடனமாடுகின்றன.உணவு 300 அடி தூரத்திற்குள்ளே எனின் வட்ட நடனத்தையும்,300 அடி தூரத்திற்கு வெளியே எனின் வாலாட்டும் நடனத்தையும் ஆடுகின்றன.நடனத்தின் நெளிவு ,விரைவு மாறுபடுவதன் மூலம் உணவு இருக்கும் திசையை காட்டுகின்றது.இதனை புரிந்து கொண்ட மற்ற தேனீக்கள் அவ்விடத்தை நோக்கி படையேடுக்கும்.

தொடரும்...

0 பின்னூட்டங்கள்: