துப்பினால் தப்பமுடியாது

பொதுவாக நல்ல பாம்புகள், மனிதனால் தமக்கு ஆபத்து ஏற்ப்படப் போவதாகக் கருதினால் மனிதனைக் கொத்திவிடுகின்றன.ஆபிரிக்க நாடுகளில் வாழும் ஒருவகை கறுப்பு நாகப்பாம்புகள் (Black Spitting Cobra/விஷம் உமிழும் கறுப்பு நாகப்பாம்புகள்) கொத்துவதற்கு பதிலாக விஷத்தை கண்களை நோக்கி துப்பிவிடும். எதிரியுடன் எதிர்துச் சண்டையிடும்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வாயுள்ளிருந்து ஒரு வகை விஷத்தை எதிரியின் கண்களை நோக்கி பீச்சுகின்றன.இவ் விஷம் கண்ணில் பட்ட உடனே கண் குருடாகிவிடும்.இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாம்பு தப்பிவிடும்.இரையை ஏணைய பாம்புகளைப்போல் கடித்து உணவாக்கிக் கொண்டாலும்,சில வேளை இரை சவாலாக விளங்கும்போது இவ்வாறு விஷத்தை பீச்சிக் கொல்கின்றன.இப்பாம்புகள் உணவாக தவளைகள்,சிறு முலையூட்டிகள் மற்றும் பறவைகளை உட்கொள்கின்றன.இந்த விஷம் உமிழும் கறுப்பு நாக பாம்பினால் 2 மீட்டர் தூரத்திற்க்கு விஷத்தை பீச்ச முடியும்.இப் பாம்புகள் 1.5 மீட்டர் நீளம் வரை வளரும்.யூன்,யூலை மாதங்களில் இணை சேரும் இப்பாம்புகள், 6 தொடக்கம் 20 முட்டைகளை இட்டு 88 நாட்கள் அடைகாத்து குஞ்சு பொரிக்கும்.

இலங்கையில் ஆனக்கொண்டா 20 குட்டிகளை ஈன்றது.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையே இலங்கையில் உள்ள மிகப்பெரிய மிருகக்காட்சி சாலை ஆகும்.இங்கு உள்நாட்டு,வெளிநாட்டு உயிரினங்கள் பல வளர்க்கப்படுகின்றன.இந்த வகையில் ஊர்வன பகுதியில் வளர்க்கப்படும் பாம்புகளில் அனகொண்டாவும் ஒன்றாகும்.இங்குள்ள இரண்டு அனகொண்டாவும் வெளிநாட்டு மிருகக்காட்சி சாலைகளுடன் மிருகங்களை பரிமாறிக்கொண்டபோது தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் கிடைக்கப்பெற்றது.இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட அனகொண்டாவே கடந்த வெள்ளிக்கிழமை(11/07/2008) 23 குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.இதில் மூன்று குட்டிகள் இறந்து விட்டன.இதனைத் தொடர்ந்து இக்குட்டிகள் தாயின் கண்ணாடிக் கூண்டில் இருந்து அகற்றப்பட்டு விசேட பராமரிப்பின் பின் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.ஆசியாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் அனகொண்டா ஒன்று இவ்வாறு 20 குட்டிகளை ஈன்றெடுத்தது இதுவே முதல் முறையாகும்.இந்த மஞ்சள் நிறத்திலான (மஞ்சளும் கருப்பும் கொண்டது) அனகொண்டா சுமார் 12 அடி நீளத்தை உடையது.அமேசன் நதியோரங்களில் வாழ்கின்ற இவை 8 -10 மீட்டர் வரை வளரக் கூடியது.ஆனக்கொண்டா என்பது "ஆனைக்கொன்றான்" (elephant killer) என்னும் தமிழ்ப் பெயரிலிருந்து உருவானதாக கருதப்படுகின்றது.

தேன் கூடு(பாகம் IV)


தேனீக்கள் தேன் கூட்டில் கூட்டமாக(சமூதாயமாக) வாழும்.இந்த தேன் கூடு வேளைக்கார தேனீயிடமிருந்து உருவாகும் மெழுகால் கட்டப்படும்.இது (தேன் வதை) இலேசானதும், அறுகோண வடிவமுடைய பல அறைகளாலானது.இவ் அறுகோண அமைப்பு மிகவும் உறுதியானது.இதனாலே தான் ஆகாய விமானங்களில் தேன்வதை போன்ற அமைப்பில் தயாரிக்கப்பட்ட அலுமினிய வலைச்சட்டகம் ஆகாய விமான உடலின் தகடுகளுக்கிடையில் இடப்பட்டுள்ளது.இதனால் ஆகாய விமானங்கள் உறுதியாகவும் இலேசானதாகவும் வெப்பத்தைத் தாங்கக்கூடியதாகவும் உள்ளது.

தேன் வதை தேனீகளின் வசிப்பிடமாக இருப்பதோடு களஞ்சியமாகவும் காணப்படுகின்றது.இங்கு சேமிக்கப்படும் தேன் அவற்றிக்கு உணவாக அமைவதோடு தேன் கூட்டைக் குளிர் நேரதில் வெப்பமாக வைத்திருக்கவும் உதவுகின்றது.

இந்த தேன்கூட்டை பாதுகாப்பதற்கு என சில வேலைக்கார தேனீக்கள் தேன்கூட்டின் மேல் பகுதியில் நியமிக்கப்பட்டிருக்கும்.இவை பிற பூச்சிகளை கூட்டினுள் செல்ல அனுமதிப்பதில்லை.இந்த தேனீக்கள் தங்களது சொந்த உயிரை பணயமாக வைத்தே பாதுகாப்பு பணியை மேற்கொள்கின்றன.வேலைக்கார தேனீக்கள் தமது ஆயுதமாக கொட்டக் கூடிய கொடுக்கை பயன்படுத்தும். ஆனால் ஒரு முறை கொட்டியதன் பின்னர் திரும்ப வளருவதில்லை.(இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும்,அதே நேரம் ஆண் தேனீக்கு கொடுக்கு காணப்படாது.)தேன்கூட்டின் பாதுகாப்பு பணியை வேலைக்கார தேனீக்கள் சுழற்சி முறையில் மாறி மாறி செய்கின்றன.தேன்கூட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் உழைக்காமல் உண்ணும் ஆண் தேனீக்கள் வெளியேற்றப்படும்!

வேலைக்கார தேனீயால் துரத்தப்படும் ஆண்தேனீ ஒன்று

வேலைக்கார தேனீக்களால் பூக்களிலிருந்து அமுதம்(Nector) என்னும் பதார்த்தம் உறிஞ்சப்படுகின்றது.இது தேனீக்களில் இரைப்பையில் பதப்படுத்தப்படுகின்றது.பின் அவை தேன் அடையில் சேமிக்கப்படுகிறது.இதில் நீர் அதிகளவும்,இயற்கையான மதுவங்களும் காணப்படும்.இதனால் தேன் நொதிப்பிற்கு உட்படும்.அதேவேளை தேன் அடை திறந்திருப்பதால் இதிலுள்ள நீர் ஆவியாகத் தொடங்கும்.இதனால் நீர்கொள்ளளவு குறைந்து தேன் செறிவடையும்.ஒரு நிலையில் தேன் நொதிப்பிற்கு போதிய நீரின்மையால் நொதிப்பு தடைப்படும்.இந்த நொதிப்புச் செயற்பாட்டை சரியான இடத்தில் நிறுத்த நீர் ஆவியாதல் உதவுகிறது.தொடர்ந்து நொதிப்பு நடைபெறும் பட்சத்தில் வெல்லங்கள் அற்ககோலாகிவிடும்.இவ்வாறு ஒரு வேலைக்கார தேனீயால் தனது வாழ் நாளில் 45 கிராம் தேனைச் சேகரிக்க முடியும்.ஒரு முழுமையான நல்ல ஆரோக்கியமான கூட்டில் 15 முதல் 23 கிலோ வரை தேன் காணப்படும்.