எழுந்திரு நண்பா எழுந்திரு

பாசம்,இரக்கம் என்பது மனிதனுக்கு மட்டும் சொந்தமில்லை,எங்களுக்கும் இரக்கம் இருக்கு என்று வீதியில் ஒர் பாச போராட்டமே நடத்தியது ஒர் நாய்!ஆம்,ஒன்றாக ஓடி விளையாடிய நாய் நடு வீதியில் கார் விபத்தில் இறந்துவிட,அதன் நண்பன் எங்கிருந்தோ ஓடி வந்து இறந்த நாயை தனது முன் காலினால் பல முறை தட்டி எழுப்பியது.முயற்சி கைகூடவில்லை, நண்பனை நடு வீதியில் இருந்து பாதுகாப்பாக வீதியின் கரைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்தது. நண்பனின் அதிக நிறை காரணமாக அதுவும் பயனளிக்காமல் போனதால்.அந்த ஆபத்தான வாகன நெரிசல் மிகுந்த வீதியில் இறந்த நண்பனுக்கு அருகில் இருந்து ஊளையிட்டு அழ தொடங்கி விட்டது.இதனை பலரும் நேரில் கண்டுள்ளனர் அவர்களது கண்களும் கலங்கியது.இந்த நாய்க்கு உள்ள பாசத்தை நீங்களும் பாருங்கள்....

2 பின்னூட்டங்கள்:

senthil said...

its a true friendship.very very beautiful photos that express the dog feelings....

காண்டீபன் said...

செந்தில் உங்கள் வருகைக்கு நன்றி.